"வேண்டும், வேண்டும் மதுக்கடை வேண்டும்" - காரணம்பேட்டையில் ஒரு 'குடி'மகனின் கதறல்

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவ்வாறான சாலைகளில் இருந்த மதுபானக் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, அகற்றப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் நிறுவ மதுபானக் கடை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பெண்கள் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கப்படும் பட்சத்தில் மது அருந்த வருவோரால் பெண்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, அவ்வாறான முடிவை மதுபானக் கடை நிர்வாகத்தினர் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சாலையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு உட்பட்ட கோடங்கிபாளையம், காரணம்பேட்டை பகுதியில் "வேண்டும் வேண்டும் ஒயின் சாப் (மதுக்கடை) வேண்டும்" என்ற வார்த்தைகள் அடங்கிய பதாகையினை கழுத்தில் மாட்டிக் கொண்டு சுப்ரமணியம் என்பவர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அவர் அணிந்திருந்த அந்த பதாகையில் அகற்றப்பட்ட மதுக்கடை எண்- 1928 அல்லது 2263 கடை வேண்டும் என எழுதப்பட்டிருந்து. 

இதனிடையே, சுப்ரமணியம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு வந்த அவரது மனைவி தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து, இனிமேல் மது வாங்கிக் குடிக்க பணம் தருவதாக அவரது மனைவி ஒப்புக்கொண்டதையடுத்து சுப்ரமணியம் தனது தர்ணாவை கைவிட்டார்.

தமிகத்தில் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என தன்னெழுச்சியாக பெண்கள் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இச்சூழ்நிலையில் மதுக்கடை வேண்டும் என இவ்வாறான 'குடி'மகன்கள் போராட்டங்களில் ஈடுபடுவது அனைத்துத் தரப்பினரையும் அதிர்ப்திக்குள்ளாக்கிள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...